Skygain News

நெல்லையில் திமுக எம்பி ஆ.ராசாவின் உருவ பொம்மை தூக்கில் தொங்க விட்ட மர்மநபர்கள்..!

திமுக பாராளுமன்ற உறுப்பினரும அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ஆராசா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவர் அந்த வகையில் சமீபத்தில் அவர் இந்துக்கள் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது .

இந்துவாக நீ இருக்கிற வரை சூத்திரன் சூத்திரனாக இருக்கிற வரை விபச்சாரியின் மகன் இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று பேசி இருந்தார் ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

இது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு வருகிறது இந்த நிலையில் நெல்லை கேடிசி நகர் மேம்பாலத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மை தூக்கில் தொங்க விடப்பட்டதால் அங்கே பரபரப்பு நிலவியது இரவில் மர்ம நபர்கள் ஆ.ராசாவின் உருவ பொம்மையை தயாரித்து பாலத்தில் தூக்கில் தொங்குவது போல் கட்டிவிட்டு சென்றுள்ளனர் .

இது குறித்து தகவல் அறிந்து நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் அங்கு சென்று தூக்கில் தொங்க விடப்பட்டிருந்த ஆ.ராசாவின் பொம்மையை அப்புறப்படுத்தினர் மேலும் சம்பவ இடத்தில் இந்து பெண்களை விபச்சாரி எனக் கூறிய திமுக எம்பி ஆ.ராசாவை தூக்கிலிடு இந்து முன்னணி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை இருந்தது எனவே இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தான் ஆ.ராசா உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆ ராசாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் எழுந்து வரும் நிலையில் அவரது உருவ பொம்மை தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More