Skygain News

அரசு பேருந்து வராததால் சாலை மறியல் போராட்டம் நடத்திய மாணவர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம் பூண்டி கிராமத்தில் இருந்து தினந்தோறும் திருப்பாபந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர் . இந்த நிலையில் மாடம்பூண்டி கிராமத்தில் இருந்து நாள்தோறும் 21 ஆம் நம்பர் (அரசு டவுன் பஸ்) பேருந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் சில தினங்களாக அரசு பேருந்து மாறாமுண்டி கிராமத்தில் வராமல் மெயின் ரோடு வழியாகவே சென்று விட்டன இதனால் பள்ளிக்கு செல்வதற்கு காலதாமதம் ஆகுவதாக கூறி இன்று திடீரென ஒட்டுமொத்த மாணவர்களும் மாடாம்பூண்டி கிராமத்தில் அரசு பேருந்து வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தகவல் இருந்து உடனடியாக திருப்பாப்பந்தல் போலீசார் மற்றும் திருக்கோவிலூர் போக்குவரத்து பணிமலையில் உள்ள அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக பேருந்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்து மாணவர்களை கலந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More