Skygain News

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் இன்று முதல் அமல் – மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று சில நாட்களுக்கு முன் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த மின்கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் குடிசை ,விவசாயம், கைத்தறி ,விசைத்தறி முதலியவற்றிலும் மின்சார மானியம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 – 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூபாய் 27.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More